மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த 2 பேர் குணம் அடைந்தனர்


மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த 2 பேர் குணம் அடைந்தனர்
x
தினத்தந்தி 25 March 2020 4:31 AM GMT (Updated: 25 March 2020 4:31 AM GMT)

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் குணம் அடைந்துள்ளனர்.

புனே, 

மராட்டிய  மாநிலத்தில் இரு வாரங்களுக்கு முன்,  2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோனையில் கண்டறியப்பட்டது.  இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

அவர்கள் இரண்டு பேரையும் சிகிச்சைக்கு பின்னர்  மீண்டும் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்புக்கு எதிர்மறையான முடிவுகள் தெரிவந்துள்ளது. இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனையிலும்  கொரோனா நெகட்டிவ் என முடிவுகள் வந்தன.

இதையடுக்கு அவர்கள் இரண்டு பேரும் இன்று (புதன்கிழமை) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்கள் என்று புணே மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி கூறினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, இந்தியாவில் இதுவரை 562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story