கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி, அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகப் பிரதமர் மோடி நேற்று, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
இதையடுத்து, மக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர, பிற காரணங்களுக்கு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல் அமைச்சர் பழனிசாமி கிரீன்வேஸ் இல்லத்தில் தலைமைச்செயலாளர், டிஜிபி திரிபாதி உள்பட அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா சிகிச்சைக்காக மதுரை, தாம்பரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் தனி மருத்துவமனை அமைப்பது தொடர்பாக முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story