தெலுங்கானாவில் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தெலுங்கானாவில் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 28 May 2020 3:06 PM GMT (Updated: 28 May 2020 3:06 PM GMT)

தெலுங்கானாவில் இன்று ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

கொரோனா வைரசின் தாக்கம் தெலுங்கானாவில் பரவலாக அதிகரித்து வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,098 ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரித்து உள்ளது.

நோய் பரவுவதை குறைக்க தெலங்கானா மாநில அரசு பல்வேறு கட்டங்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 37 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,321 பேர் அங்கு கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story