நாட்டின் பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள்? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி


நாட்டின் பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள்? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
x
தினத்தந்தி 28 Jun 2020 9:00 PM GMT (Updated: 28 Jun 2020 8:24 PM GMT)

நாட்டின் பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள்? என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

லடாக்கில் சீன ராணுவ ஊடுருவல் மற்றும் இந்திய வீரர்களின் உயிரிழப்பு தொடர்பாக ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்து விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பி பிரதமர் மோடியை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

அந்தவகையில் நேற்றும் அவர் பிரதமர் மோடிக்கு தனது டுவிட்டர் மூலம் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். அவர் கூறுகையில், ‘நாட்டின் பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள்?’ என கேட்டிருந்தார். பிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சியான மன்கீ பாத் உரைக்கு முன் இந்த கேள்வியை அவர் எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே எல்லை பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலாவும் பிரதமர் மோடியை குறை கூறியுள்ளார். குறிப்பாக இந்திய-நேபாள எல்லை மோதல் குறித்து அவர் கூறுகையில், ‘தற்போது, முதல் முறையாக நேபாளம் கூட எல்லையில் தனது ராணுவத்தை நிறுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் மட்டுமே இது நடக்கும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story