காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை


காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை
x
தினத்தந்தி 4 July 2020 8:48 AM GMT (Updated: 4 July 2020 8:48 AM GMT)

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.

ஜம்மு,

காஷ்மீரின் குல்காம் நகரில் ஆரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.  இந்த மோதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவனை வீரர்கள் சுட்டு கொன்றனர்.  தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.  இதனை காஷ்மீர் மண்டல போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.

Next Story