கேரளாவில் இன்று மேலும் 821 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று மேலும் 821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,480- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து 5,373- பேர் குணமடைந்துள்ள நிலையில், 7,063 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது என்று கூறப்பட்ட திருவனந்தபுரத்தில் இன்று 222 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,267 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை 5,32,505 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,480- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து 5,373- பேர் குணமடைந்துள்ள நிலையில், 7,063 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது என்று கூறப்பட்ட திருவனந்தபுரத்தில் இன்று 222 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,267 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை 5,32,505 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story