ஆந்திராவில் கொரோனா சிகிச்சை வசதிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து


ஆந்திராவில் கொரோனா சிகிச்சை வசதிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 9 Aug 2020 3:06 AM GMT (Updated: 9 Aug 2020 3:06 AM GMT)

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை வசதிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

விஜயவாடா,

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளால் 1,842 பேர் உயிரிழந்து உள்ளனர்.  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருத்துவமனைகள் இல்லாத நிலையில், அங்கிருக்கும் ஓட்டல்களில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளை அமைத்து மருத்துவமனைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேபோன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்காகவும் சில ஓட்டல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விஜயவாடா நகரில் உள்ள ஓட்டல் ஒன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை ஒன்று பயன்படுத்தி வந்தது.  அந்த ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றுள்ளனர்.  அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story