காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை ஆகஸ்ட் 16 முதல் தொடங்கும் என அறிவிப்பு


காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை ஆகஸ்ட் 16 முதல் தொடங்கும் என அறிவிப்பு
x

காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை, ஆகஸ்ட் 16 முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பவான் என்னும் பகுதியில் புனித தலங்களில் ஒன்றான வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ளது. இமயமலைத் தொடரின் மீது அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். புனித யாத்திரைக்கு வரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என பல தரப்பினர் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று காரணமாக வைஷ்ணவி தேவி கோவிலுக்கு பக்தர்கள் வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 16 முதல் மீண்டும் யாத்திரை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 500 யாத்ரீகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கொரோனா தொற்று இல்லை என்று சான்றிதழ் கொடுக்கும் பக்தர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story