பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடுதான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக பாசாங்கு-மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்


பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடுதான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக பாசாங்கு-மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 29 Aug 2020 4:40 AM GMT (Updated: 29 Aug 2020 4:40 AM GMT)

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடான பாகிஸ்தான் தன்னை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக சித்தரிக்க முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி

'எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தாங்களும் பட்டதாகவும் அதுகுறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி), பாகிஸ்தான் வெளியிட்டதாகவும் கூறியது. ஆனால் இந்த அறிக்கையை அங்கீகரிக்க இந்தியா மறுத்துவிட்டது,

பயங்கரவாதம் குறித்த அமர்வில் பாகிஸ்தான் தூதர் பேசவில்லை அது பாதுகாப்பு கவுன்சிலில் அறிக்கை வழங்கப்பட்டதாக பாசாங்கு செய்தது. உறுப்பினர் அல்லாதவர்கள் அங்கு அறிக்கையிட முடியாது. ஆனால் பாகிஸ்தான் மிஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதனை வெளியிட்டு உள்ளது.

அறிக்கையை ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் மிஷன் வெளியிட்டதுடன், அல்கொய்தா துணைக் கண்டத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டதாகக் கூறியது.

இந்த அறிக்கையை இந்தியா பாகிஸ்தானின் 'ஐந்து மிகப் பெரிய பொய்கள்' என்று கூறி கண்டனம் செய்ததோடு, அந்த அறிக்கை எப்படி, எங்கே வெளியிடப்பட்டது என்று இந்தியா கேள்வி எழுப்பியது.

பாகிஸ்தான் உறுப்பினராக இல்லாத போது அந்த அறிக்கையை வெளியிட்டது எப்படி எனவும் கேள்வி எழுப்பியது

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடான பாகிஸ்தான் தன்னை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக சித்தரிக்க முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.

தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர் கூறியதாவது:-

பயங்கரவாதம் மற்றும் தொற்றுநோய்க்கான உலகளாவிய பதில்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வால் தூண்டப்பட்ட போதுமான இடையூறுகள் ஏற்பட்டால் மட்டுமே வெளிப்படும்.

பயங்கரவாதம் என்பது ஒரு புற்றுநோயாகும், இது தொற்றுநோய் முழு மனிதகுலத்தையும் பாதிக்கும் விதத்தில் உள்ளது.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக தன்னை கூறிக் கொள்ளும் அந்நாடு தொடர்ந்து தேடப்படும் பயங்கரவாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் தரும் நாடாக இருக்கிறது

மும்பை தாக்குதல், அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் போன்ற சம்பவங்களால் உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story