பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த ராகுல் காந்தி- பாஜக பதிலடி


பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த ராகுல் காந்தி- பாஜக  பதிலடி
x
தினத்தந்தி 9 Oct 2020 12:10 PM GMT (Updated: 9 Oct 2020 12:10 PM GMT)

காற்றாலை மூலம் மின்சாரம் மட்டுமின்றி, காற்றில் இருந்து சுத்தமான குடிநீர், சுத்தமான ஆக்ஸிஜனையும் பிரித்து எடுக்கும் சாத்தியங்கள் இருக்கிறதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருந்தார்.

புதுடெல்லி,

காற்றலை நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் அண்மையில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது டென்மார்க் நாட்டை சேர்ந்த காற்றலை நிறுவன சிஇஓ ஹெண்ட்ரிக் ஆண்டர்சன் என்பவரிடம்   பேசிய பிரதமர் மோடி, “காற்றாலை மூலம் மின்சாரம் மட்டுமின்றி, காற்றில் இருந்து சுத்தமான குடிநீர், சுத்தமான ஆக்ஸிஜனையும் பிரித்து எடுக்கும் சாத்தியங்கள் இருக்கிறதா” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். 

பிரதமர் மோடியின் வினவிய இந்த வீடியோ தொகுப்பை தனது டுவிட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, “ 'இந்தியாவுக்கான உண்மையான ஆபத்து என்னவென்றால், நம்முடைய பிரதமருக்குப் புரியாமல் இருப்பது அல்ல. அவரைச் சுற்றி இருப்பவர்கள் ஒருவருக்குக்கூட, அவரிடம் உண்மையைச் சொல்ல துணிச்சல் இல்லை என்பதே” என்றார். 

ராகுல் காந்தியின் கருத்தை கடுமையாக சாடியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், “ உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களே மோடியின் கருத்தை அங்கீகரிக்கும் போது,  ராகுல் காந்தி பிரதமர் மோடியை கேலி செய்கிறார்.  ராகுல் காந்திக்குப் புரிந்துகொள்ளும் சக்தியில்லை என்று அவரிடம் சொல்வதற்கு அவரைச் சுற்றியுள்ளவர்களுக்குத் துணிச்சல் இல்லை” என தெரிவித்துள்ளார்.  அதேபோல், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியும் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். 

Next Story