மராட்டிய மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டிய மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 20 Oct 2020 3:15 PM GMT (Updated: 20 Oct 2020 3:15 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று 8,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,09,516 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு இதுவரை 42,453 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 13,92,308 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 1,74,265 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story