மராட்டியத்தில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டியத்தில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 26 Oct 2020 5:01 PM GMT (Updated: 26 Oct 2020 5:01 PM GMT)

மராட்டியத்தில் இன்று புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மராட்டியம் மாநிலம் இருந்து வருகிறது. 

இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் இன்று புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மராட்டியத்தில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,48,665 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 84 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 43,348 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 9,905 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 14,70,660 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,34,137 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story