குஜராத்தில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
பரூச்,
குஜராத்தின் பரூச் நகரில் இன்று மாலை 3.39 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.
இதனை இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.