காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று மாலை 6.56 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.
இதனை இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
நாட்டின் வட பகுதிகளில் குறிப்பிடும்படியா, மராட்டியம், மத்திய பிரதேசம் மற்றும் அருணாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சமீப காலங்களாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன. குஜராத்தின் பரூச் நகரில் நேற்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி இருந்தது.
Related Tags :
Next Story