இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 44,489 பேருக்கு தொற்று உறுதி


இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 44,489 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 26 Nov 2020 4:23 AM GMT (Updated: 26 Nov 2020 4:23 AM GMT)

இந்தியாவில் இன்று புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வந்தநிலையில், கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,66,706 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 524 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,35,223 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 36,367 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86,79,138 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 4,52,344 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 13 கோடியே 59 லட்சத்து 31 ஆயிரத்து 545 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 10,90,238 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

Next Story