காஷ்மீரில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் சுட்டு கொலை; ஆயுதங்கள், சேட்டிலைட் போன் பறிமுதல்
காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் துர்கன் போஷாணா பகுதியில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் இன்று மோதலில் ஈடுபட்டனர்.
இதில், 2 பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதலில் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களது கூட்டாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கொல்லப்பட்டவர்கள் சாஜித் மற்றும் பிலால் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து இரண்டு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், மற்றொரு துப்பாக்கி ஒன்று மற்றும் சேட்டிலைட் போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதனை ஜம்மு பிரிவு ஐ.ஜி. தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story