எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டு கொலை; ஹெராயின், வெடிபொருட்கள் பறிமுதல்


எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டு கொலை; ஹெராயின், வெடிபொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Feb 2021 9:48 PM GMT (Updated: 13 Feb 2021 9:48 PM GMT)

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய நபரை சுட்டு கொன்ற பி.எஸ்.எப். படையினர் 14 ஹெராயின் பாக்கெட்டுகள், வெடிபொருட்களை கைப்பற்றினர்.

தான் தரன்,

பாகிஸ்தான் எல்லையையொட்டிய பஞ்சாப் பகுதியில் போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறது என்ற நீண்டகால குற்றச்சாட்டு உள்ளது.  இந்நிலையில், போதை பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்கள் இணைந்து பஞ்சாப் எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதில், பாகிஸ்தானில் இருந்து மர்ம நபர் ஒருவர் இந்திய பகுதிக்குள் பஞ்சாப் எல்லை வழியே ஊடுருவியுள்ளார்.  சந்தேகத்திற்குரிய வகையில் இந்திய எல்லைக்குள் புகுந்த அந்த நபரை படையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

பஞ்சாப்பின் தான் தரன் மாவட்டத்தில், அந்நபரை சுட்டு கொன்ற பி.எஸ்.எப். படையினர் 6 தோட்டாக்கள், 14 ஹெராயின் பாக்கெட்டுகள், 2 மொபைல் போன்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

Next Story