ஆந்திராவில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதி விபத்து: 3 பேர் பலி


ஆந்திராவில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதி விபத்து: 3 பேர் பலி
x
தினத்தந்தி 7 March 2021 7:52 AM GMT (Updated: 7 March 2021 7:52 AM GMT)

ஆந்திராவில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் தள்ளுவண்டி மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோதாவரி,

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் புட்டாயிகுடெம் அருகே இன்று காலை நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் தள்ளுவண்டி மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் எலுரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கோதாவரி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story