கேரளாவில் மேலும் 5,063- பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் மேலும் 5,063- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 9 April 2021 1:54 PM GMT (Updated: 9 April 2021 1:54 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,063-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் மேலும் 5,063- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,475- பேர் குணம் அடைந்த நிலையில், 22 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 36,185- ஆக உள்ளது.  கொரோனா தொற்றைக் கண்டறிய இன்று 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று மாநில சுகாதாரத்துறை மந்திரி கேகே சைலஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

“  தேர்தல் சமயத்தில் சமூக இடைவெளியை நாம் பின்பற்றவில்லை. இதனால், தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறிப்பிடும் வகையில் அதிகரித்துள்ளது.  கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்” என்றார்.

Next Story