டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனா


டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 April 2021 11:51 PM GMT (Updated: 17 April 2021 11:51 PM GMT)

டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

டெல்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறியற்ற கொரோனா பாதிப்பு அவருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் தற்போது வீட்டுத் தனிமையில் அவா் உடல் நலத்துடனேயே இருப்பதாகவும் நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. 

முன்னதாக, இந்த வாரத்தின் தொடக்கத்தில் உயா்நீதிமன்றத்தைச் சேர்ந்த 3 நீதிபதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அவா்களுக்கு லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் அவா்களும் தற்போது வீட்டுத் தனிமையில் இருந்து வருகின்றனா்.


Next Story