தேர்தல் தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழு அமைத்தது காங்கிரஸ் தலைமை


தேர்தல் தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழு அமைத்தது காங்கிரஸ் தலைமை
x
தினத்தந்தி 11 May 2021 3:26 PM GMT (Updated: 11 May 2021 3:26 PM GMT)

4 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்தது.

புதுடெல்லி,

மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.  தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்து 2 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை  உத்தரவிட்டுள்ளது. 

குழுவின் தலைவராக அசோக் சவான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  குழுவில் மூத்த தலைவரான மணிஷ் திவாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


Next Story