அசாம், மே.வங்கம், பஞ்சாப், அரியானா மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரம்


அசாம், மே.வங்கம், பஞ்சாப், அரியானா மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 1 Jun 2021 4:36 PM GMT (Updated: 1 Jun 2021 4:36 PM GMT)

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் சற்று குறையத்தொடங்கியுள்ளது.

புதுடெல்லி,

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 4,682- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து 4,992- பேர் குணம் அடைந்த நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக 51 பேர்  உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் 51,333- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,424- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 17,722-பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 137- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 78,613- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அரியானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1233- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 3453- பேர் குணம் அடைந்த நிலையில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 16,280- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பஞ்சாபில் கொரோனா பாதிப்புடன் 2184- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5039-பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 33,444- ஆக உள்ளது. 

Next Story