அசாம், மே.வங்கம், பஞ்சாப், அரியானா மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரம்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் சற்று குறையத்தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 4,682- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 4,992- பேர் குணம் அடைந்த நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக 51 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் 51,333- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,424- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 17,722-பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 137- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 78,613- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1233- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 3453- பேர் குணம் அடைந்த நிலையில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 16,280- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பஞ்சாபில் கொரோனா பாதிப்புடன் 2184- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5039-பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 33,444- ஆக உள்ளது.
Related Tags :
Next Story