மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று அதிகரிப்பு


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2021 4:46 PM GMT (Updated: 22 Jun 2021 4:46 PM GMT)

மராட்டியத்தில் நேற்று 6,270 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.

மும்பை,

மராட்டியத்தில் இன்று கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,473- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றை விட 2 ஆயிரத்துக்கும் அதிகமாக தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய 2 லட்சத்து 16 ஆயிரத்து 861- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று 188- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  1,18,795 ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9,043- ஆக உள்ளது.  மாநில தலைநகரான மும்பையில் இன்று 568- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பால் இன்று 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story