எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை திங்கள் கிழமை வரை ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை திங்கள் கிழமை வரை  ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 23 July 2021 7:25 AM GMT (Updated: 23 July 2021 7:25 AM GMT)

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் 4-வது நாளாக முடங்கியுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. செல்போன் ஒட்டு கேட்க திட்டமிடப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், முதல் நாளிலேயே நாடாளுமன்றம் முடங்கியது. 

புதிய மத்திய மந்திரிகளைக் கூட பிரதமர் மோடியால் அறிமுகம் செய்து வைக்க முடியவில்லை. 2-வது நாளாக கடந்த செவ்வாய்க்கிழமையும் நாடாளுமன்றம் எந்த அலுவலையும் கவனிக்க முடியாமல் முடங்கியது.

புதன்கிழமை பக்ரீத் விடுமுறையை தொடர்ந்து, நேற்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி நீடித்ததால் நேற்று அவை நடவடிக்கை முடங்கியது.  இந்த நிலையில், 4-வது நாளாக இன்றும் மக்களவையில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். 



Next Story