எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கியது. ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாடாளுமன்றம் கூடியதில் இருந்தே அவையில் எதிரொலித்து வருகிறது.
இவ்விவகாரத்தை மையப்படுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கை முடங்கியுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் அமளி நீடித்தது. இதனால், இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story