ஜார்க்கண்ட்: 'லிப்ட்’ அறுந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி


ஜார்க்கண்ட்: லிப்ட்’ அறுந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி
x
தினத்தந்தி 27 Aug 2021 6:10 AM GMT (Updated: 27 Aug 2021 6:10 AM GMT)

ஜார்க்கண்டில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கொடர்மா மாவட்டத்தின் பஞ்ஷிட்ஹா பகுதியில் அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த கட்டுமான பணிகளை ஊழியர்கள் 4 பேர் ’லிப்ட்டில்’ (தானியங்கு மின்தூக்கி) ஏறி பார்வையிட்டனர். 80 அடி உயரத்தில் லிப்ட் இருந்தபோது லிப்டின் கம்பிகள் அறுந்து விழுந்தன. 

இதனால், லிப்ட் வேகமாக தரையில் வந்து மோதியது. இந்த விபத்தில் லிப்டில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story