தலைநகர் டெல்லியில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தலைநகர் டெல்லியில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 11 Sep 2021 11:16 PM GMT (Updated: 11 Sep 2021 11:16 PM GMT)

தலைநகர் டெல்லியில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் நேற்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 38 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 412 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14 லட்சத்து 12 ஆயிரத்து 716 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை கொரோனா பாதிப்பால் டெல்லியில் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 83 என்ற அளவில் உள்ளது. 

Next Story