ஒடிசாவில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை


ஒடிசாவில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Sep 2021 3:07 AM GMT (Updated: 13 Sep 2021 3:07 AM GMT)

ஒடிசாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புவனேஷ்வர், 

வடமேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஒடிசாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

ஒடிசாவில் உள்ள 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட் எச்சரிக்கையும் இந்தியா வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story