இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியர் பிடிபட்டார்...


இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியர் பிடிபட்டார்...
x
தினத்தந்தி 28 Sep 2021 8:48 PM GMT (Updated: 28 Sep 2021 8:48 PM GMT)

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியரை எல்லைப்பாதுகாப்பு படையினர் பிடித்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரி மாவட்டம் கிரி செக்டார் பகுதியில் உள்ள எல்லைப்பகுதியில் இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒரு நபர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

உடனடியாக துரிதமாக செயல்பட்ட எல்லைப்பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். இதனை தொடர்ந்து அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பாகிஸ்தானியர் என்பது தெரியவந்தது.

மாற்றுத்திறனாளியான அவரிடம் எந்த ஆயுதங்களும் இல்லை. தவறுதலாக வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக அந்த நபர் பாதுகாப்பு படையினரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபரை பாகிஸ்தானிய அதிகாரிகளுடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட உள்ளனர். 

Next Story