மியான்மரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவு


மியான்மரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவு
x
தினத்தந்தி 7 Oct 2021 8:08 PM GMT (Updated: 7 Oct 2021 8:08 PM GMT)

மியான்மர் நாட்டில் இன்று நள்ளிரவு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானது.

நைபிடா,

மியான்மரில் நேற்று நள்ளிரவு 11.58 மணியளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி பர்மாவின் மேற்கு வட மேற்கு பகுதியில் 144 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Next Story