காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்


காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
x
தினத்தந்தி 11 Oct 2021 11:34 AM GMT (Updated: 11 Oct 2021 11:34 AM GMT)

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்து மற்றும் சீக்கிய மதங்களை சேர்ந்த மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சூரங்கோட் பகுதியில் உள்ள டேரா கி ஹாலி கிராமத்தில் இன்று அதிகாலை பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுடனான மோதலில் ராணுவ அதிகாரி, 4 ராணுவ வீரர்கள் என 5 பேர் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையில் ராணுவம் களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் சூரங்கோட் பகுதியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. 

இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு ராணுவம் விரைந்து சென்றது. அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளுக்கு பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நீடித்து வருகிறது. 

Next Story