காஷ்மீரில் இரண்டு நாட்களில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி


காஷ்மீரில் இரண்டு நாட்களில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
x
தினத்தந்தி 12 Oct 2021 2:07 PM GMT (Updated: 12 Oct 2021 2:07 PM GMT)

காஷ்மீரில் நேற்றும், இன்றும் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மேலும், பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் 5 பேர் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நேற்றும், இன்றும் (2 நாட்களில்) பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

நேற்றும், இன்றும் நடந்த இரண்டு வெவ்வேறு என்கவுண்டர்களில் மொத்தம் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story