நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆயுத பூஜை வாழ்த்து


நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆயுத பூஜை வாழ்த்து
x
தினத்தந்தி 14 Oct 2021 12:20 AM GMT (Updated: 14 Oct 2021 12:20 AM GMT)

ஆயுத பூஜையை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், ‘‘நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துகள். அநீதியை அழித்ததன் அடையாளம், துர்கா. பெண் சக்தியின் கடவுள் வடிவம். தேச கட்டுமானத்தில் பெண்கள் அதிக மரியாதையும், சம பங்களிப்பும் பெறக்கூடிய சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி ஏற்போம்’’ என்று கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘‘அனைவருக்கும் நல்ல உடல்நிலையும், மகிழ்ச்சியும், வளமும் அமைய துர்க்கையை வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், ‘‘துர்கா தேவியின் ஆசி, நமக்கு எப்போதும் இருக்கட்டும். அந்த ஆசி, சமூகத்தில் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் பெருக்கட்டும். அனைவரது வாழ்க்கையும் ஒளிர வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Next Story