இரண்டு நாள் பயணமாக லடாக் செல்கிறார் ராம்நாத் கோவிந்த்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Oct 2021 3:56 AM GMT (Updated: 14 Oct 2021 4:15 AM GMT)

இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஜம்மு காஷ்மீா் மற்றும் லடாக் செல்கிறாா்.

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரா்களுடன் தசரா பண்டிகையை கொண்டாட உள்ளார். இதற்காக இருநாள் பயணமாக இன்று ஜம்மு காஷ்மீா் செல்கிறாா். லடாக் பகுதிக்குச் செல்லும் அவா் லே, சிந்துப் படித்துறையில் சிந்து தா்ஷன் பூஜை செய்கிறாா். பின்னா் மாலை உதம்பூரில் ராணுவ வீரா்களுடன்அவா் கலந்துரையாடுகிறார். 

அக்டோபா் 15-ம் தேதியன்று திராஸ் பகுதியில் உள்ள காா்கில் போா் நினைவுச் சின்னத்தில் ஜனாதிபதி மரியாதை செலுத்துவிட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்களுடன் கலந்துரையாட உள்ளாா் என்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வருகையையொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story