மும்பை பங்கு சந்தை; முதன்முறையாக 61 ஆயிரம் தொட்ட சென்செக்ஸ் குறியீடு


மும்பை பங்கு சந்தை; முதன்முறையாக 61 ஆயிரம் தொட்ட சென்செக்ஸ் குறியீடு
x
தினத்தந்தி 14 Oct 2021 1:17 PM GMT (Updated: 14 Oct 2021 1:17 PM GMT)

மும்பை பங்கு சந்தையில் முதன்முறையாக சென்செக்ஸ் குறியீடு 61 ஆயிரம் புள்ளிகள் தொட்டுள்ளது.


மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடையும்போது, சென்செக்ஸ் குறியீடு 568.90 புள்ளிகள் உயர்ந்து (0.94 சதவீதம்) 61,305.95 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம் அடைந்து உள்ளது.

இவற்றில் எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஐ.டி.சி. ஆகியவை லாபத்துடன் காணப்பட்டன.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 176.80 புள்ளிகள் உயர்ந்து (0.97 சதவீதம்) 18,338.55 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம் அடைந்து நிறைவடைந்து உள்ளது.


Next Story