லஞ்ச வழக்கில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் கைது


லஞ்ச வழக்கில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2021 5:45 PM GMT (Updated: 22 Oct 2021 5:45 PM GMT)

மத்திய பிரதேசத்தில் லஞ்ச வழக்கு ஒன்றில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.


புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தின் கத்னி மவட்டத்தில் சிலோண்டி என்ற இடத்தில் அமைந்த சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளையில் மேலாளராக பணிபுரிபவர் சசிகாந்த் மிஷ்ரா.  இவர் கச்சர்காவன் என்ற கிராமத்தில் கடை ஒன்றை தொடங்குவதற்காக கடன் தொகை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.  ஆனால், இதனை பரிசீலனை மேற்கொள்ள மேலாளர் மிஷ்ரா ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார்.

இதுபற்றி போலீசில் புகாரளிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து, மிஷ்ரா லஞ்சம் பெறும்போது மறைந்திருந்த சி.பி.ஐ. அமைப்பு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.  இதன்பின்பு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.


Next Story