மராட்டிய மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு


மராட்டிய மாநிலத்தில்  லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
x
தினத்தந்தி 15 Nov 2021 5:55 AM GMT (Updated: 15 Nov 2021 5:55 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் 4.0 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மும்பை,

மராட்டிய  மாநிலம் கோலாப்பூர் அருகே இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானதாக, நில அதிர்வுகளை ஆய்வு செய்யும் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது மராட்டிய மாநிலத்தின்  கோலாப்பூரில் இருந்து வடமேற்கே  78 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 2:36 மணிக்கு  ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


Next Story