கேரளாவில் புதிதாக 3,968- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,968- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: கேரளாவில் மேலும் 3,968- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 7,515- பேர் குணம் அடைந்துள்ளனர். ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,675- ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 12 ஆயிரத்து 301- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 54,091- ஆக உள்ளது.
அதிகபட்சமாக கோழிக்கோடு மாவட்டத்தில் 724- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 622- பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 465 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story