காஷ்மீரில் அமைதி நிலவ பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - பரூக் அப்துல்லா
காஷ்மீரில் அமைதி நிலவ இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவ இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.
இந்த விஷயத்தை நாங்கள் எடுப்போம் அல்லது பிரச்சினையை தீர்க்க முடியாது என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது. நமது எல்லைக்குள் நுழைந்து கிராமங்களை அமைத்துள்ள சீனாவிடம் அவர்கள் (மத்திய அரசு) பேச்சுவார்த்தை நடத்தும்போது பாகிஸ்தானுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது?’ என்றார்.
Related Tags :
Next Story