29-ந் தேதி தவறாமல் சபைக்கு வருமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Nov 2021 8:34 PM GMT (Updated: 25 Nov 2021 8:34 PM GMT)

29-ந் தேதி தவறாமல் சபைக்கு வருமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 23-ந் தேதிவரை இத்தொடர் நடக்கிறது.

இந்தநிலையில், முதல் நாளான 29-ந் தேதி, மாநிலங்களவை கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு மாநிலங்களவை பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

29-ந் தேதியன்று, சபையில் சில மிக முக்கிய அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளதால், சபையிலேயே இருக்குமாறு பா.ஜனதா கொறடா சிவபிரதாப் சுக்லா, தனது உத்தரவில் கூறியுள்ளார். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, சபை அலுவல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story