ஆனால் இது வைரலாகாது...! ஆண் எம்.பி.க்களுடன் மீண்டும் செல்பி வெளியிட்ட சசிதரூர்


ஆனால் இது வைரலாகாது...! ஆண் எம்.பி.க்களுடன் மீண்டும் செல்பி வெளியிட்ட சசிதரூர்
x
தினத்தந்தி 30 Nov 2021 11:59 AM GMT (Updated: 30 Nov 2021 12:03 PM GMT)

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டுவிட்டரில் 6 பெண் எம்.பிக்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நேற்று கூடியது. கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி,  பாராளுமன்றத்தில்  வேளாண் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முதலில் மக்களவையில்  இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் வேளாண் சட்ட ரத்து மசோதா  நிறைவேறியது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இந்த மசோதா நிறைவேறியது.  பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட ரத்து மசோதா, இனி ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிலையில்,  காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டுவிட்டரில்  6 பெண் எம்.பிக்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் திரிணாமுல் காங்கிரசின் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், தேசியவாத காங்கிரசின்  சுப்ரியா சுலே, காங்கிரசின் ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சசி தரூருடன் போஸ் கொடுத்தனர்.

இதனை பலரும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்தனர். இதை தொடர்ந்து  சக பெண் எம்.பி.க்களுடன் செல்பி எடுத்தது வெறும் “பணியிட தோழமையின் நிகழ்ச்சி” என்று சசிதரூர் விளக்கம் அளித்தார்.

நேற்று ஒரு செல்பி மூலம் சர்ச்சையை கிளப்பிய  காங்கிரஸ் எம்.பி சசி தரூர் இப்போது மீண்டும் ஒரு புதிய செல்பி வெளியிட்டு உள்ளார். தன்னை ஒரு "சம-வாய்ப்பு குற்றவாளி" என்று தெரிவித்துள்ள  அவர். இன்று ஆண் எம்.பிக்களுடன் எடுத்த செல்பியை வெளியிட்டு உள்ளார். இது முன்னர் வெளியிட்ட செல்பி போல் வைரலாகாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story