வெறுப்புணர்வை வீழ்த்த தேர்தலே சரியான தருணம்: ராகுல்காந்தி
வட மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தல் பல கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த நிலையில், 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியானது நேற்றுமுந்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
‘வெறுப்புணர்வை தோற்கடிக்க இந்த தேர்தல்கள் தான் சரியான தருணம்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜகவை தோற்கடித்து, பஞ்சாபில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.
Related Tags :
Next Story