மராட்டியத்தில் இன்று 41 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது
மும்பை
மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 41 ஆயிரத்து 327 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 40 ஆயிரத்து 386 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story