மேற்கு வங்கத்தில் இன்று 6,980 பேருக்கு கொரோனா
மேற்கு வங்கத்தில் தற்போது 1,10,183 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,65,245 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,338 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 20,418 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் மேற்கு வங்கத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,34,724 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு 1,10,183 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story