மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் - வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா?


மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் - வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா?
x
தினத்தந்தி 1 Feb 2022 12:57 AM GMT (Updated: 1 Feb 2022 4:12 AM GMT)

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

புதுடெல்லி, 

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று தொடங்கியது. அதன்படி, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஆற்றிய இந்த உரையில் பல்வேறு துறைகளில் மத்திய அரசின் கூட்டுச்சாதனைகளை பட்டியலிட்டு அவர் பாராட்டினார். 

இந்நிலையில், 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.

உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களை கவர கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக, வருமான வரி உச்சரவம்பு அதிகரிக்கப்படுமா?, வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா? என பல்வேறு எதிர்பார்ப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் எழுந்துள்ளன. மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

Next Story