மியான்மரில் சங்கிலித்தொடர் விபத்தில் 3 பேர் பலி


மியான்மரில் சங்கிலித்தொடர் விபத்தில் 3 பேர் பலி
x
தினத்தந்தி 10 Feb 2024 8:15 PM GMT (Updated: 10 Feb 2024 8:20 PM GMT)

இந்த சங்கிலித்தொடர் விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

யாங்கூன்,

மியான்மர் தலைநகர் யாங்கூனில் இருந்து மண்டலேவுக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. மண்டலே நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே சென்ற மற்றொரு கார் மீது மோதியது. பின்னர் அடுத்தடுத்து 5 கார்கள் இந்த விபத்தில் சிக்கின.

இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த கார்களை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து அந்த காரில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். எனினும் இந்த சங்கிலித்தொடர் விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த 7 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story