மேகாலயாவில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 4 பேர் உயிரிழப்பு !
மேகாலயாவில் பெரு வெள்ளம், நிலச்சரிவுகளுக்கு 4 பேர் உயிரிழந்தனர்.
கவுகாத்தி,
மேகாலயாவின் கரோ மலைப்பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால், அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
நிலச்சரிவில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மேலும், தென்மேற்கு கரோ கரோ மலைப்பகுதியில் ஏற்பட்ட மற்றொரு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டரை வயது சிறுவன் உயிரிழந்தான்.
இந்திய வானிலை ஆய்வு மையம் அசாமில் ஜூன் 12 வரை கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story