சிக்கிம்: கார் பள்ளத்தில் விழுந்து விபத்து - 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி..!


சிக்கிம்: கார் பள்ளத்தில் விழுந்து விபத்து - 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி..!
x

சிக்கிமில் கார் பள்ளத்தில் விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் டிரைவர் உயிரிழந்தனர்.

காங்டாக்,

வடக்கு சிக்கிமில் கார் பள்ளத்தில் விழுந்த விபத்தில் மராட்டியத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் 5 பேர் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த கார் டிரைவர் என 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முன்னதாக மராட்டியத்தைச் சேர்ந்த குடும்பம் சிக்கிமுக்கு விடுமுறைக்காக வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் தலைநகர் காங்டாக்கில் இருந்து லாச்சுங்கிற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

கெடுங் பீர் அருகே வந்தபோது கார் சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுரேஷ் புனாமியா, துரல் புனாமியா, ஹிரால் புனாமியா, தேவன்ஷி புனாமியா, ஜெயன் பரிமார் மற்றும் அவர்களது காரை ஓட்டிச் சென்ற சோமி பிஸ்வகர்மா ஆகியோர் உயிரிழந்தனர்.

போலீசார், ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் நேற்று இரவு மீட்புப் பணிகளைத் தொடங்கின. ஆனாலும் இன்று காலையில் தான் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க முடிந்தது. இந்த விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story