ஆட்டோ மீது அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் மோதியது- 5 பேர் உயிரிழப்பு


ஆட்டோ மீது அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் மோதியது- 5 பேர் உயிரிழப்பு
x

சாலை வளைவில் பஸ் வேகமாக திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே உள்ள குட்டிப்பாறை பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை அப்துல் மஜித்(வயது55) என்பவர் ஓட்டிச்சென்றார். அவர்களது ஆட்டோ செட்டியங்காடு என்ற பகுதியில் சென்றபோது, எதிரே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் வந்த பஸ் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித், தஸ்னிமா(33), அவரது குழந்தைகள் ரின்ஷா பாத்திமா(12), ரைஹா பாத்திமா(4), சகோதரி முஹ்சினா(35) ஆகிய 5 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் வந்த அய்யப்ப பக்தர்கள் யாரும் காயம் அடையவில்லை.

சாலை வளைவில் பஸ் வேகமாக திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story