ஆற்றங்கரையில் சுற்றித்திரிந்த முதலை


ஆற்றங்கரையில் சுற்றித்திரிந்த முதலை
x

தட்சிண கன்னடா மாவட்டத்தில் பலத்த மழையால் ஆற்றங்கரையில் முதலை ஒன்று சுற்றித்திரிந்த சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுள்ளியா தாலுகா சுப்பிரமணியா கிராமத்தில் ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த ஆற்றில் இருந்து வெளியேறிய ஒரு முதலை ஆற்றங்கரையில் உலா வந்தது. அந்த முதலை அங்கும், இங்குமாக சென்று வந்தது. முதலையை பார்த்து ஆற்றுக்கு வந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஒரு நாய், முதலையை பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. பின்னர் முதலை ஆற்றுக்குள் சென்று விட்டது.


Next Story